Thursday, March 3, 2011


எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கிவழுக்குது
மல்லிகைப் பூவும் என்மனசும்.
கம்பெனி சைக்கிளில்
போகும் உன்னை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்து விட்டு
வரக்கூடாதா?

பா.விஜய்

No comments: